மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய
அரசு
ஒரு
உள்நாட்டுப் போரை
அறிவித்திருக்கிறது. இந்தப்
போரின் பெயர்
– ‘ஆபரேசன் கிரீன்
ஹன்ட்’

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய
அரசு
ஒரு
உள்நாட்டுப் போரை
அறிவித்திருக்கிறது. இந்தப்
போரின் பெயர்
– ‘ஆபரேசன் கிரீன்
ஹன்ட்’
(காட்டு
வேட்டை).
சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா
மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களில் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக் கட்டுவதே இந்தத்
தாக்குதலின் நோக்கம் என்று
அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும் விமானப் படைத்தளமும் அங்கே
விரைந்து உருவாக்கப்படுகின்றன. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சி.ஆர்.பி.எஃப்,
கோப்ரா, சி-60,
கிரே
ஹவுண்ட்ஸ், இந்திய
திபெத்
எல்லைப்படை, நக்சல்
எதிர்ப்பு அதிரடிப்படை என
விதவிதமான அரை
இராணுவப் படைகளைச் சேர்ந்த ஒரு
இலட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டு தாக்குதல் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்திய
இராணுவ
ஹெலிகாப்டர்களும், அமெரிக்க இராணுவ
செயற்கைக் கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு
பார்க்கின்றன. இந்திய
இராணுவ
அதிகாரிகள் போரை
வழி
நடத்துகிறார்கள். சொந்த
நாட்டின் மக்களுக்கு எதிராக,
இந்த
மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப்
போருக்கு மத்திய
அரசு
ஒதுக்கியிருக்கும் நிதி
ரூ.
7300 கோடி.
மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக ஏற்கெனவே சட்டிஸ்கார் அரசு
உருவாக்கியிருக்கும் சல்வா
ஜுடும்
என்ற
கூலிப்படை, கடந்த
4 ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து 3 இலட்சம் பழங்குடி மக்களை
விரட்டியிருக்கிறது. 50,000 பழங்குடி மக்கள்
கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை
வைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஆபரேசன் கிரீன்
ஹன்ட்-
இன்
விளைவாக மேலும்
பல
ஆயிரம்
பழங்குடி மக்கள்
காடுகளைத் துறந்து ஓடுகிறார்கள். “இலங்கை
இராணுவத்தின் இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி” என்று
வக்கிரமாகப் பிரகடனம் செய்திருக்கிறார் சட்டிஸ்கார் மாநில
டி.ஜி.பி விசுவரஞ்சன்.
இந்தப்
போர்வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இதுதான். தண்டகாரண்யாவின் காடுகளிலும் மலைகளிலும் அற்புதமான அரிய
கனிவளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத்தாது, செம்பு,
தங்கம்,
வைரம்,
அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமென்டு உற்பத்திக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள்,
நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிகா,
குவார்ட்சைட் போன்ற
28 வகைக்
கனிவளங்களும் காட்டு
வளங்களும் நீர்வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளும், இந்தியத் தரகு
முதலாளிகளும் இஷ்டம்
போல
இந்தப்
புதையலை அள்ளிச் செல்ல
முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள் மாவோயிஸ்டு கொரில்லாக்கள். சிதம்பரத்தின் கொலைவெறிக்குக் காரணம்
இதுதான்!
ஆம்.
தண்டகாரண்யாவின் காடுகள், மலைகள்,
ஆறுகள்
அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்குத் தெரியாமலேயே அறுத்துக் கூறு
கட்டி
விற்றுவிட்டது அரசு.
வேதாந்தா (ஸ்டெரிலைட் கம்பெனியின் தாய்
நிறுவனம்) என்ற
பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு
40 கி.மீ நீளமுள்ள நியாம்கிரி மலையைத் தாரை
வார்த்திருக்கிறது. இந்த
மலையில் உள்ள
பாக்சைட் தாதுவின் இன்றைய
மதிப்பு 200 இலட்சம் கோடி
ரூபாய்.
இதற்கு
அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும்
7 சதவீதம். இந்தியாவின் மொத்த
நிலக்கரி இருப்பில் 16%, இரும்புத் தாதுவில் 20% சட்டிஸ்கார் மாநிலத்தின் நான்கு
மாவட்டங்களில் புதைந்திருக்கின்றன. இவற்றை
டாடா,
எஸ்ஸார், ஜின்டால் போன்ற
தரகு
முதலாளிகளுக்கு கிரயம்
எழுதித் தந்துவிட்டது அம்மாநில அரசு.
இரும்புத் தாதுவின் இன்றைய
உலகச்சந்தை விலை
டன்னுக்கு 210 டாலர்
(சுமார்
10,000 ரூபாய்).
இம்முதலாளிகள் அரசுக்குத் தரவிருக்கும் விலை
– டன்னுக்கு 27 ரூபாய்.
இவைபோல ஒன்று
இரண்டல்ல, நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள்!
பழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுக்கே தெரியாமல் தரகு
முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சின்னஞ்சிறிய ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலம்
இப்படி
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறி
விட்டது. இங்கிருந்து மட்டும் 10 இலட்சம் பழங்குடி மக்களும் விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். டாடா,
பிர்லா,
ஜின்டால், எஸ்ஸார், மிட்டல் போன்ற
தரகு
முதலாளிகளும், வேதாந்தா, போஸ்கோ, ஹோல்சிம், லபார்க், ரியோ
டின்டோ போன்ற
பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது
பிணந்தின்னிகளைப் போல
வட்டமிடுகிறார்கள்.
பழங்குடி மக்களோ
வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ, டாடா,
வேதாந்தா, மிட்டல், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஜின்டால் என
ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் ஆங்காங்கே உள்ள
மக்கள்
போராடுகிறார்கள். அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டி
முடித்து விட்டது. ஆனால்
பாக்சைட் மலையை
நெருங்க முடியவில்லை. கோபால்பூரில் டாடாவின் இரும்பாலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கமும் பிளாட்டினமும் எடுக்க
வந்த
ஜின்டால் நிறுவனம் அங்கே
நுழையவே முடியவில்லை. இவையெல்லாம் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதக்
குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல,
தங்கள்
மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான
போர்
என்ற
பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப்போர் உண்மையில் மக்களுக்கெதிரான போர்!
“நமது நாட்டில் இயற்கை
வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், அது
முதலீட்டு சூழலை
பெரிதும் பாதிக்கும் என்று
இந்தப்
போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன்சிங். டாடா,
அம்பானி, மிட்டல் போன்ற
தரகு
முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார்
போராடினாலும் அவர்களுக்கு எதிராக
அரசு
போர்
தொடுக்கும் என்பதே
மன்மோகன் சிங்
கூறும்
செய்தி.
இந்தப்
போர்,
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான
போர்
மட்டுமல்ல, இது
மக்களுக்கு எதிரான
போர்.
காடு
என்பது
பழங்குடி மக்களின் உரிமை.
கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக, அவர்களின் உரிமை
பறிக்கப்படுகிறது. கடல்
மீனவர்களின் உரிமை.
பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள் மீன்வளத்தை அள்ளுவதற்காக, மீனவர்களுக்கு கடலில்
எல்லைக்கோடு போடப்படுகிறது. மீறினால் ‘காட்டு
வேட்டை’
போல,
‘கடல்
வேட்டை’
ஒன்றை
இந்த
அரசு
அறிவிக்கும். விதை
என்பது
விவசாயிகளின் மரபுரிமை. ஆனால்
அதனைப்
பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு.
இனி
தமது
விதைகளின் மீது
விவசாயிகள் உரிமை
கோரினால் போலீசு அவர்கள் மீது
வழக்கு
தொடுக்கும். மீறினால் போரும் தொடுக்கும்.
பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மட்டுமல்ல, பரந்து
பட்ட
மக்கள்
போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த
‘முதலீட்டு சூழலை’
உருவாக்குவதற்காகத்தான் ஒரிசாவின் பழங்குடி மக்கள்
வெளியேற்றப்படுகிறார்கள். அதே
தென்கொரிய ஹுண்டாயின் ‘முதலீட்டுச் சூழலைப்’ பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த
தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். பன்னாட்டு முதலாளிகளின் முதலீட்டுக்கு உகந்த
சூழலை
உருவாக்கத்தான் குறைந்தபட்ச ஊதியம்
முதல்
பணிநிரந்தரம் வரையிலான எல்லா
உரிமைகளும் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பறிக்கப்படுகின்றன. கல்வி
வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த
சூழலை
உருவாக்கித் தருவதற்காக அரசுப்
பள்ளிகள், கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச் சூழலுக்காக அரசின்
இலவச
மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டு மக்கள்
அந்த
முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.
இந்தப்
போர்க்களம் தண்டகாரண்யாவின் காடுகளைத் தாண்டி
நாடு
முழுவதும் வியாபித்திருக்கிறது. போரின் வடிவங்கள் மட்டுமே இடத்துக்கேற்ப மாறுகின்றன. ஆனால்
போரின் நோக்கம் – நமது
நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறுகாலனியாக்கம்.
இந்த
மறுகாலனியாதிக்க கொள்கை
அனைத்திலும் எல்லா
ஓட்டுக்கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன. கொள்ளையின் ஆதாயங்களைப் பங்கு
போட்டுக்கொள்வதற்கு மட்டுமே அவை
தமக்குள் மோதிக்கொள்கின்றன.
“1994 இல் காட்
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தனியார்மய தாராளமயக் கொள்கையிலிருந்து மட்டும் எந்த
அரசும்
வழுவவில்லை” என்று
சில
ஆண்டுகளுக்கு முன்
ஒரு
பன்னாட்டு முதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன் சிங்.
ஆம்.
மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாகியிருக்கிறார்கள்.பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக, காண்டிராக்டர்களாக, பங்குதாரர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடீசுவரர்களின் மன்றமாகியிருக்கிறது நாடாளுமன்றம். அதிகாரிகளும், நீதிபதிகளும் பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டார்கள்.
சீரழிந்து நாறிக்கொண்டிருக்கும் இந்த
அரசியலுக்கு வெளியே
மக்கள்
நலனுக்காகத் தம்மை
அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, தன்னலனைத் துறந்தவர்களாக, இலஞ்சத்தால் விலைக்கு வாங்க
முடியாதவர்களாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் பல்லிளிக்காதவர்களாக, இழப்புக்கும் தியாகத்துக்கும் அஞ்சாதவர்களாக – நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மட்டும்தான். ஓட்டுக் கட்சிகள் மீது
மக்கள்
மென்மேலும் நம்பிக்கை இழந்து
வரும்
சூழலில், மறுகாலனியாக்கத் தாக்குதல்களின் தீவிரம், மக்களை
நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.
எனவேதான்,”நம்
நாடு
எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்”
என்று
நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி
எச்சரிக்கிறார் மன்மோகன் சிங்.
அத்வானி முதல்
புத்ததேவ் வரை
அனைவரும் அதனை
வழிமொழிகிறார்கள்.தங்களுடைய எதிரிகள் யார்
என்பதை
ஆளும்
வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு
அறிவித்துவிட்டன.
அதே
நேரத்தில் தமது
நண்பர்கள் யார்
என்பதை
மக்கள்
புரிந்து கொள்ள
விடாமல், ஓட்டுக்கு இலஞ்சம், இலவசத்
திட்டங்கள், போன்ற
ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி
ஓட்டு
வேட்டை
நடத்துகின்றனர். இந்த
ஓட்டு
வேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள்
நாடினால், உடனே
‘காட்டு
வேட்டை’
தொடங்குகிறது.
மாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்துவதனால்தான் அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக ப.சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய்.
அடுக்கடுக்காகத் தொடுக்கப்படும் மறுகாலனியாக்கத் தாக்குதல்களால் வாழ்க்கை பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எதிர்த்துக் கேட்டால் ஒடுக்கப்பட்டு, கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள்
என்பதை
அரசு
அறிந்தே இருக்கிறது. இந்த
வெடியின் திரியும் அதனைப்
பற்றவைக்கும் பொறியும் நக்சல்பாரிகள் தான்
என்ற
உண்மையும் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக் கிள்ளுவதில் கவனம்
செலுத்துகிறது. மறுகாலனியாக்க எதிர்ப்பின் கூர்முனையை நக்சல்பாரி இயக்கத்தை முறிக்க முயல்கிறது. ‘ஆபரேசன் கிரீன்
ஹன்ட்’
என்ற
நக்சல்
வேட்டையின் நோக்கம் இதுதான்.
No comments:
Post a Comment