Monday, 4 July 2016

குண்டுவெடிப்பு- துண்டாடப்படும் ஒற்றுமை

Powered by Translate

வியாழன், 1 மே, 2014

குண்டுவெடிப்பு- துண்டாடப்படும் ஒற்றுமை

சென்னையில் குண்டுவெடிப்பு......ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக் இருந்தாலும் அதன் செய்தியாளரை மூச்சு விடாமல் பதட்டமாக பேச விட்டு உங்களையும் அதன் ஓட்டத்தில் இணைத்திருப்பர்.அந்த பதட்டத்தை அது தனக்கு கூலி கொடுக்கும் கட்சிகளுக்கோ இல்லை அது சார்ந்த சித்தாந்தத்தின் சார்பாகவோ குற்றவாளியாக முன்னிறுத்தும்.அந்த குற்றவாளிகள்தான் நிகழ்ந்த மற்றும் நிகழப்போகும் அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பு.
புதியதலைமுறையில் குண்டு வெடிப்பு என்று முக்கிய செய்தி ஓட செய்தியாளர் இது குண்டுவெடிப்புதானா என அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர் என கூறுகிறார்.பரவாயில்லை கண்முன் நடந்ததுதானே விடுங்க.அதனை தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்ட தீவிரவாதி சென்னையை தகர்க்க திட்டமிடப்பட்டது குரிப்பிடத்தக்கதுன்னு முத்தாய்ப்பாக தமது எதிராளியை குற்றவாளியாக நிறுத்துகிறது..
ஒரு குண்டுவெடிப்பிற்கு பின் எந்த அடிப்படையில் இவர்களாக தீர்மானிக்கிறார்கள் என தெரியவில்லை.இப்படியான சூழ்நிலையில் காவல்துறை பல தீவிர ஆய்வுகளுக்கு பிறகே தமது விசாரணையின் கோணத்தை ஆரம்பிக்கும்.
வெடிகுண்டின் மூலப்பொருட்கள் என்ன? அது அதிகமாக கிடைக்குமிடம் எது? அதன் விற்பனையில் யார்? யார்? இதற்கு முன் இப்படியான மூலப்பொருட்கள் அடங்கிய குண்டு வெடிப்ப்பு யார் செய்தது? எங்கு?அவர்களுக்கு இங்கு ஆதரவு நிலை எப்படி?
குண்டு வெடிக்கப்படும் விதம் வேறு சம்பவங்களோடு ஒத்து வருகிறதா? அதில் சம்பந்தப்பட்டவர்களின் தொடர்புக்கு இங்கு வாய்ப்புள்ளதா? அனுதாபம் உண்டா? நாள் ,கிழமை என பல விடயங்கள் ஆராயப்படும்.
குண்டு வெடிக்க வைக்கப்படும் விதம் கொண்டும் விசாரணை அவசியப்படும்.ரிமோட் எனில் ஆள் அந்த பகுதியில்தான் இருந்துள்ளான்.வேறு முறைகள் எனில் அந்த குண்டு எங்கு பொருத்தப்பட்டது? அந்தப்பகுதிகளை குறித்த விசாரணை...
குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள சமூக பிரச்சனைகள்,அதன் தீவிரம் என்ன?
இப்படியாக இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் அதற்கு  முன்னேயே ஊடகங்கள் தமது எதிரியை இல்லை எவரையாவது குற்றவாளியாக்கி கொலை செய்ய துடிப்பதுதான் வேதனையே.
இதனைப்போன்ற தொடர் செய்திகள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தல் மூலம் மிகப்பெரும் நஞ்சை விதைத்து வருவது புரிகிறதா? நெல்லை என்பதால் எனது தம்பி மட்டும் ஒரு ஹோட்டலில் அருவா கத்தி இருக்கிறதா என சோதிக்கப்பட்டபோது கூனி நின்றான்.அதை இஸ்லாமியர்களுக்கு பொருத்தி பார்க்கும்போது உண்மையை புரிந்தும் கொண்டான்.
திருநெல்வேலியில் கொலை நடந்தது என்பதால் நானும் கொலைகாரனா?அங்கு சாதி கலவரம் நடந்தால் நானும் சாதி வெறி பிடித்தவனா? இல்லை மத்த ஊரில் கொலைகள் நடக்கலியா? மத்த ஊர்களில் சாதி வெறியே இல்லியா?அனைத்தும் அனைத்திலும் உள்ளது.ஆனால் ஹரி காட்டியதும் விதைத்ததும் நெல்லையாச்சே....
இதனை இஸ்லாமியர்களுக்கும் பொருத்தி பாருங்கள்.உங்களோடு பணிபுரியும் இஸ்லாமியர்,இங்கு பதிவெழுதும் இஸ்லாமிய பதிவர்கள்,உங்களோடு பள்ளியில் படித்த இஸ்லாமியர் இவர்கள் வெடிகுண்டுகளோடு சுற்றுகிறார்களா என்ன? என்னோடு படித்த சாகுல் ஹமீது டீக்கடையில்தான் வேலை பார்க்கிறான்.அவனையும் ஸ்லிப்பர் செல் என்று வக்கிர எண்ணத்தின் நவீன பதிப்பான துப்பாக்கியில்  முருகதாஸ் எச்சரிக்கை செய்கிறார்.இயல்பான ஒருவனின் வாழ்வை உடைத்துப்போட்டு அவனை தீவிரவாதியாகவே மாற்றி விடுதல் சரிதானா?

மல்டிப்ளக்ஸ் மாலில் ஆயிரம் கண்கள் தையலிடப்பட்ட செருப்பையே உற்று நோக்குவதை போல கூனி நழுவி செல்லும் நிலையில் நம்மோடு உடன் வாழும் ,நம்மைப்போலவே அண்ணாச்சி கடையில தேங்காய் சில்லு கடன் வாங்கி துவையலும் பழைய சாதமுமாகத்தான் வாழ்க்கையை நகர்த்துகின்றனர் பல இஸ்லாமியர்கள்..எங்கிருந்து வந்தது வெறுப்பு?

பயணங்களில்,தங்கும் விடுதிகளில்,கல்லூரிகளில்,வேலை பார்க்குமிடத்தில் என ஒவ்வொரு இடத்திலும் நம்மோடு பயணிக்கும் சக மனிதனை சந்தேகிக்க தூண்டியது அரசியலன்றி வேறென்ன?
சக மனிதனை தனிமைப்படுத்தும் இந்த செயலை அப்படியே ஏற்றுக்கொண்டு சமூக வலைதளங்களில் இணைந்து கொண்டு  சமூகத்தை உடைத்து போடுகிறோம் நாம்.

சமீபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் பிணத்தில் பார்ப்பனனை கண்டு பிடித்த மேதாவித்தனத்திற்கும் வக்கிரத்திற்கும்  சற்றும் குறைவில்லாதது இஸ்லாமியனை தீவிரவாதியாக சித்தரித்து சிரிக்கும் வக்கிரம்.

ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் பிழைத்து வாழும் ஒரு இஸ்லாமியன் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டு கொண்டிருக்கிறான்.குஜராத் கொலைவெறியில் ஆவேசமாக வாளேந்திய அசோக் மோசசி என்பவர் இன்னும் அசோக் மோசசியாகத்தான்  (மோசசி-செருப்பு தைப்பவர்) இருக்கிறார். தூண்டி விட்ட அரசியல்வாதிகள் மந்திரிகளானார்கள்.பிரதமராக வரும் வாய்ப்பு  வரை முன்னேறுகிறார்கள் .ஆனால் மோசசி?இன்னும் செருப்புதான் தைத்து வருகிறார்.

என்னால் உறுதியாக சொல்லமுடியும்...ஒவ்வொரு இந்தியர்களிடத்தும் இந்துவாக்கி இஸ்லாமியனை எதிரியாக்கி இந்துக்களை ஒன்றுபடுத்துவதாக அரசியல் லாபம் பார்ப்பதுதான் கட்சிகளின் திட்டமிடப்பட்ட ஒற்றுமை உடைப்பு பரப்புரைகளும்  ,செயல்பாடுகளும் .

ஊடகங்களுக்கும் அரசியலுக்கும் பணம் கிடைக்கலாம்..நமக்கு இழப்பில்லையா?நாஞ்சில் மனோவின்  மூக்கு துடைத்துவிட்டு தோசை ஊட்டிய முஸ்லிம் அண்ணாச்சியை  கடைசி காலத்தில் தனித்து செல்ல விரட்டியதை தவிர வேறென்ன கிழித்தது இந்த மதப்பற்று? வாப்பாக்களும் தாத்தாக்களும் பேரன்களை ஒன்றாகத்தான் விளையாடவும் படிக்கவும் பழக்கியிருந்தனர்.உங்கள் பிள்ளைகளை எப்படி அனுமதிக்க போகிறீர்கள்?


எண்ணற்ற சந்தேகக்கைதிகளாக வாழ்வை தொலைத்து கிடக்கும் அப்பாவிகளுக்கும் நிமிர்ந்து உரிமை கொண்டாடிய ஊரில் செய்யாத தவறுக்கு வெட்கி குனிந்து செல்லும் பாசக்கார அண்ணாச்சிகளுக்கும் இந்தப்பதிவு அர்ப்பணம்.

காஸ்மீர் மக்கள் மீது இராணுவத்தின் செயல் கேள்வி பதில்

82 கருத்துகள்:

  1. நீங்கள் ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரர் என்பதாலேயே எனக்கு உங்களை மிகவும் பிடித்துள்ளது . உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஏன் ஒவ்வொரு எழுத்துகளும் கூட கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

    உங்கள் அனுபவங்களை மட்டும் கூறாமல் அதிலிருந்து உங்கள் பார்வையையும் கூறுவது அற்புதமாக உள்ளது. உங்கள் அனுபவங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் தொடர்கிறேன். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
    பதிலளி
    பதில்கள்
    1. நன்றி சீனு....மேலும் பல எழுத நிறைய சிக்கல்கள் உள்ளது...இணைந்திருப்போம்.
  2. //எல்லை பாதுகாப்பு படையில் பணி புரியும் நான் இந்த பதிவு எழுதுவதால் என் வேலைக்கே கூட ஆபத்து வரலாம்.மனித உரிமை ஆர்வலர்கள் இதை எடுத்து சென்றால் என் வேலைக்கு ஆப்பு என்பது தெரிந்தே எழுதுகிறேன்... ஒரு புரிதலுக்காக எடுத்து கொள்ளுங்கள்....//

    சலாம் சகோ.சதீஷ் செல்லத்துரை,

    தாங்கள் எடுத்த ரிஸ்க் அளவிடமுடியாத அளவு பெரிது சகோ.

    வெகுஜன ஊடகத்தில் மறைக்கப்படும் உண்மைகளை வெளி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாங்களின் இந்த இமாலய முயற்சியானது அந்த அப்பாவி காஷ்மீர் சிறுவனின் தியாகத்தை விட எல்லாம் மிக உயர்ந்தது சகோ.சதீஷ் செல்லத்துரை.

    தங்களை போன்ற நல்லோர் மிகுதியாகவும்,
    தங்களின் பணிக்கும் உடமைக்கும் உயிருக்கும் யாராலும் எவ்வித ஆபத்தும் வராமல் இருக்கவும்,
    தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவும்,
    வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் சகோ.சதீஷ் செல்லத்துரை.
    பதிலளி
  3. அருமையான ஆக்கம்! வாழ்த்துக்கள் தோழரே!
    பதிலளி
  4. " தங்களை போன்ற நல்லோர் மிகுதியாகவும்,
    தங்களின் பணிக்கும் உடமைக்கும் உயிருக்கும் யாராலும் எவ்வித ஆபத்தும் வராமல் இருக்கவும்,
    தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவும்,
    வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் "


    என‌


    ~முஹம்மத் ஆஷிக் citizen of world~

    கூறியிருப்ப‌தையே நானும் வழி மொழிந்து

    தங்களை போன்ற நல்லோர் மிகுதியாகவும்,

    தங்களின் பணிக்கும் உடமைக்கும் உயிருக்கும் யாராலும் எவ்வித ஆபத்தும் வராமல் இருக்கவும்,

    தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவும்,

    வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்


    வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்
    பதிலளி
    பதில்கள்
    1. Namakkul naamae vaetrumai paaraatti kolvathaal thaan, vanjaga ennam kondoar ithu poandra adaatha seyalgalil eedupadugindranar. Namathu otrumai oangidavum ellaam valla Iraivanai praartthiyungal aiyaa...
    2. வருகைக்கு நன்றி JEYACHANDRAN.ஒற்றுமை ?இங்கே படித்த மக்களே எப்படி இந்த பதிவுக்கு வருத்தம் தெரிவிக்கிறார்கள் பார்த்தீர்களா?அதையும் மீறி இருக்கணும்...
  5. அன்பு சகோ., சதீஷ் செல்லதுரை

    முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று மிகைப்படுத்தி செய்திகள் வெளியிடும் சில ஊடகங்களுக்கும் இணையத்தில் சிலப்பதிவுகளுக்கும் மத்தியில் தெளிந்த சிந்தனையோடு எழுதிய உங்களுக்கு என் நன்றிகள்.

    அதுவும் அந்த துறையிலே இருந்துக்கொண்டு எதார்தத்தை பொதுவில் இங்கே சொல்வது மிகவும் வியப்புக்குரியது..

    உங்கள் பணி மேலும் சிறக்க - நீங்கள் நலமுடன் இருக்க பிரார்த்தித்தவனாய்

    உங்கள் சகோதரன்
    குலாம்
    பதிலளி
    பதில்கள்
    1. ஒரு சாதாரண விஷயம் போல ஒரு சமுதாயத்தை மிக எளிதாக குற்றம் சொல்வது எனக்கு பல நேரங்களில் பலத்த அதிர்ச்சியை தருகிறது.நன்றி சகோதரரே...
  6. எல்லாம் சரி, உங்கள் நோக்கமும் உயர்ந்தது.
    கொஞ்சம் பின்னோட்டங்களையும் பார்க்கவும், மதவெறி பிடித்தவர்கள் தீவிரவாதிகளை உருவாக்குபவர்கள் உங்களுக்கு பின்னோட்டம் போட்டு உங்கள் பதிவை பல இடங்களில் ஒட்டி உங்கள் பதிவின் நோக்கதை சிதைத்து வருகிறார்கள்.
    பதிலளி
  7. மதவெறி பிடித்த வானோஜீர், சுவனபிரியன் கோஷ்டி வந்துவிட்டது கவனம்
    பதிலளி
  8. //மதவெறி பிடித்த வானோஜீர், சுவனபிரியன் கோஷ்டி வந்துவிட்டது கவனம்//

    ஹி..ஹி ராணுவத்தின் அத்து மீறலுக்கு எந்த பதிலையும் காணோம். இதில் மத வெறியைப் பற்றி நிங்கள் கவலைப் படலாமோ அனானி! உண்மை வெளி வருகிறதே என்ற ஆதங்கமோ! இருக்கலாம் :-(
    பதிலளி
  9. அருமையான ஆக்கம்! வாழ்த்துக்கள் தோழரே!
    பதிலளி
  10. // பொது மக்களுக்கு பாதுகாப்பை மனதில் உணர வைக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு ஆப்ரேசனின் குறிக்கோளாகும்.அது நடப்பதில்லை என்பதும் மாறாக பயமும் வெறுப்பும் தோன்றுகிறது என்பது கசப்பான உண்மை.//
    பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறோம் என்கிற பெயரில் இது போன்ற அப்பாவி வாலிபர்களை டார்ச்சர் கொடுத்தால் அவர்கள் தீவிரவாதியாகும்
    வாய்புகள் தான் அதிகம் என்பதை ஏனோ அரசாங்கம் + இராணுவம் உணருவதில்லை ...!!??
    உண்மையான முஸ்லிம்கள் தன தாய்நாட்டிற்கு துரோகம் செய்ய கனவிலும் நினைக்கமாட்டார்கள் ....
    காஷ்மீரில் தினமும் நடக்கும் மனித உரிமை மீறல்களை உங்களைப்போல
    நல்லுள்ளம் கொண்டவர்கள் வெளியே சொன்னால்தான் உண்மைகள் தெரியும் .......
    தங்களுக்கு தெரிந்த உண்மைகள் கசப்பாக இருந்தாலும் வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன் .....
    பதிலளி
    பதில்கள்
    1. உண்மைகள் உறங்குவதில்லை.மௌனமான ஒவ்வொரு நேரமும் ஒரு குற்றத்தை ஆதரிக்கிறோம்.இணைந்திருப்போம்...
  11. உங்களுக்கு கூட தாய்நாடு என்ற concept எல்லாம் உண்டா? அல்லாவையும் முகம்மது நபியையும் தவிர வேறு எதையும் மதிக்க வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு தாய்நாடாம், துரோகமாம்.
    பதிலளி
    பதில்கள்
    1. பெயரில்லா ... உங்களுக்கு தேசப்பற்று என்றால் என்னவென்று தெரியுமா ...? படித்து பாருங்கள்
      http://newstbm.blogspot.com/2012/08/blog-post_15.html
  12. இந்தியா என்ற இந்த ஏகாதிபத்திய சுரண்டல் அமைப்பை பாதுகாக்க இன்னும் எத்தனைதேசிய இனங்களின் சுதந்திரமும் அமக்களின் உரிமைகளும் உயிரும் பரிபோகபோகின்றதோ தெரியவில்லை ஆனால் ஏகதிபத்தியம் என்னும் காகித புலி விரைவில் வீழ்வது நிச்சயம்
    பதிலளி
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி KARUTHA...காகித புலி வீழட்டும்!
  13. சகோதரர் சதீஷ் செல்லதுரை,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    முதல் முறை இந்த கட்டுரை படித்தபோது, என்ன சொல்வது என்று திக்கித்தே இருந்தேன். இந்த பதிவில் வரும் அந்த இளைஞனின் மனித நேயத்திற்கு சற்றும் சளைக்காதது அந்த இளைஞனிடம் நீங்கள் காட்டிய அன்பும் அணுகுமுறையும்.

    //காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு?//

    இதனை பிரதிபலிக்கும் அதே நேரம் இப்படி உண்மையை அடுத்தவருக்கு எடுத்துரைக்கும் இதயம் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது குறித்தும் பிரதிபளிக்கின்றேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தையும், உடல்நலத்தையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள வேண்டும் என்று பிரார்தித்தவனாக,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ
    பதிலளி
    பதில்கள்
    1. நன்றி சகோதரரே ஒரு பாவ மன்னிப்பு கிடைத்தது போல் உள்ளது.வருகைக்கு நன்றி. இணைந்திருப்போம்.
  14. //காஷ்மீர் என்றாலே தீவிரவாதம்  முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும். தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு?//

    காஷ்மீர் குறித்து பலருக்கும் இங்கே தவறான கண்ணோட்டமே விதைக்கப்படுகிறது. ஆனால் அவர்களை அருகிலிருந்து பார்ப்போருக்கே யதார்த்தம் என்னவென்று தெரியும். இதே கருத்தை எல்லைப் படையிலிருக்கும் என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். என்னுடன் படித்த நண்பர் சுந்தரராஜ் காஷ்மீரில்தான் சிப்பாயாக இருக்கிறார். அவரைக் குறித்து
    இங்கே எழுதியுள்ளேன்.

    தங்கள் துணிச்சலான எழுத்துப் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்!
    பதிலளி
    பதில்கள்
    1. நன்றி சகோ.எனக்கும் திருநெல்வேலிதான்.டவுன் ரயில் ஸ்டேசன் பக்கம்தான் வீடு.இணைந்திருப்போம்.
  15. மிக முக்கியமான பதிவு சகோதரா. ஒரு சமுதாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவதை ஒரு நிகழ்ச்சி வாயிலாக சொல்லி இருக்கிறீர்கள். இது போன்று எண்ணிலடங்கா மனித உரிமை மீறல்கள் அங்கே தினந்தோறும் நடக்கிறது என்பதை உங்களை போன்ற நல்லுள்ளங்கள் நினைத்தால் மட்டுமே வெளிக்கொணர முடியும். சிறப்பான பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் !!!
    பதிலளி
  16. ஒரு நல்ல பதிவைப் பாராட்டியம், ஒரு நல்ல மனிதருக்காகப் பிரார்த்தித்தும் தங்கள் சுய அடையாளத்துடன் பின்னூட்டமிடும் வாசகர்களையும், குறைகூறியும் எச்சரித்தும் தங்களை மறைத்து அநாநியாகப் பின்னூட்டமிடும் வாசகர்களையும் நல்ல மனிதர்கள் அடையாளம் கண்டுகொள்வர்.
    பதிலளி
    பதில்கள்
    1. நன்றி சகோ உங்கள் வாழ்த்துக்களும்,வழிகாட்டுதலும் அவசியம் வேண்டும்.இணைந்திருப்போம்.
  17. நல்ல பகிர்வு நன்றி சதீஷ்.
    யோவ் யோக்கியவான்களே, ஏதோ ஒரு பின்னூட்டமிட்டு நடு நிலை வேஷம் போட வேண்டாம்.

    சதீஷ் அவர்கள் குறிப்பிட்டது போல சம்பவங்கள் நடக்க நிறைய சாத்தியம் உண்டு. ஏன் நம் ஊர் காவல் நிலையங்களிலும் இது போல் நடந்திருக்கின்றது நடக்கின்றது இன்னமும் நடக்கும். காரணம், பிடிபடும் அத்தனை பேரூம் இப்படி தான் ஒரே மாதிரி விஷயத்தை சொல்லி தன்னை நிருபராதி என் நிரூபிக்க பார்ப்பார்கள். அப்புறம் போலீஸ்காரனோ இல்லை ராணுவத்தினரோ எப்படி தான் உண்மையை கண்டு அறிவது???

    பின்னூட்டத்தில் வாந்தி எடுத்திருக்கும் அன்பர்கள் தங்கள் ஆள் தவறு செய்யாமல் பிடிபட்டு சித்திரவதைக்கு ஆட்பட்டிருக்கிறான் என்ற கருத்தினால் மட்டுமே கக்கி கக்கி செய்திருக்கிறார்கள். அதை வைத்து முஸ்லீம்கள் தவறே செய்யாமல் பிடிபட்டு த்ண்டனைக்கு உட்படுகின்றனர் என்பதே அவர்கள் சொல்ல விரும்பும் கம்பளியில் வடி கட்டிய பொய்யை.
    இவர்களை பொறுத்தவரை பின்லேடன் அப்பாவி அமெரிக்கா சதி செய்து பின்லேடனை மாட்டிவிட்டது என்பதுதானே!

    இதற்கு உங்களின் இடுகை காரணமாகி விட்டது தான் என்பது தான் வருத்தம் நண்பரே :-(
    பதிலளி
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.
      #போலீஸ்காரனோ இல்லை ராணுவத்தினரோ எப்படி தான் உண்மையை கண்டு அறிவது???#
      இது பற்றி ஒரு பதிவு எழுதலாமோ என தோன்றுகிறது.
    2. ///இது பற்றி ஒரு பதிவு எழுதலாமோ என தோன்றுகிறது.///=========என்னது... தோணுதா...?

      அவசியம் எழுதுங்க சகோ.சதீஷ் செல்லம்..!

      நம் நாட்டுக்கே.... இல்லை இல்லை உலகத்துக்கே.... மிக மிக மிக அவசியமான பதிவாக அது அமையக்கூடும்..!

      உங்கள் பதிவுகளின் சிகமாக போற்றப்படலாம்..! ம்ம்ம்.... சீக்கிரம் சகோ..! ஆவலுடன் காத்து இருக்கிறேன்...!
    3. Aiya peyarillaa nanbarae!
      Thangalaiyo allathu thangalai saarnthavargalaiyo kaaval thurai anbargal poaliyaai vazhakkil pinaitthaal mattumae antha vali thangalukku theriyum. enakku evvalavo Islaamiya nanbargal ullanar.
      Namathu Ilangai Thamizharai enni evvaaru manathil eeram kondulloamo athu poalae, namathu Islaamiya sagoathararum avar tham Matha anbargalin paal eeram kondullanarae thavira, athai 'theeveera vaatha ennam' endru kutram chaatalaagathu.
    4. நல்ல எண்ணம் கொண்ட உங்களை வரவேற்கிறேன்...மிக எளிதாக பொத்தாம் பொதுவாக தீவிரவாதமாக ஒரு மார்க்கத்தையே கூறுவதும் சித்தரிப்பதும் தவறு,நன்றி அன்பரே...
  18. ஹலோ, பெயரில்லா அன்பரே!

    உங்களுக்கும் யதார்த்தம் புரியவில்லை.........

    பின்லேடன் ஓர் அப்பாவி என்று சொல்ல நாம் முனையவில்லை. ஆனால், அமைதியான முறையில் வாழ்க்கை நடாத்திக்கொண்டிருந்த அவர் தீவிரவாதியாக மாறியதற்கான காரணம், இங்கு சுட்டிக்காட்டப்பட்ட கஷ்மீர் சம்பவம் போல், அமெரிக்காவின் நடவடிக்கைகளும் அமைந்தமைதான்.

    முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் தொடுக்கப்பட்ட அடாவடித்தனங்களை அவர் தன்மீதானதாகக் கருதி, செயற்பட்டதன் விளைவே அது!

    "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற முதுமொழி, இந்த அர்த்தத்துடன் சொல்லப்பட்டதுதான்.

    சாதுகளை (முஸ்லிம்களை) தூண்டிவிட்டு, 'பயங்கரவாதிகள்' என்று லேபல் அடிக்க விரும்பும் உங்களைப் போன்றவர்களுக்கு, சதீஷ் சொல்ல வரும் கருத்து எங்கே புரியப் போகிறது?
    பதிலளி
    பதில்கள்
    1. ஹலோ palich
      பின்லாடன் போன்ற பயங்கரவாதிகளை சாதுக்களாக புனிதர்களாக மாற்றும் உங்கள் முயற்சி சதீஷ் போன்றவர்களின் நல்ல நோக்கங்களையும் வீணடித்துவிடும்.
    2. வருகைக்கு நன்றி palich.இணைந்திருப்போம்.
    3. அல்லிநகரம் பேரா. பொன்னுசாமி9 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 4:52
      “பெயரில்லா”… இவனைப் போன்ற மனநோயாளினால்தான் பாரதம் என்ற அமைதி பூங்கா, அமைதியிழந்து சாதி… மத பேதங்கள் மன்றி கிடக்கிறது.
      சதீஷ் போன்ற சில பரந்த மனம்கொண்டவர்கள் பாரதத்தில் வாழும் வரை.. மனிதம் வாழும்…
    4. Sariyaaga sonneergal Alli Nagaram Aiyaa! Aanaal, anbarai satru mariyaathaiyudan viliyungal, namathu Thamizh panbaadu athu thaanae...
  19. கஷ்மீர் மட்டுமல்ல, முஸ்லீம்களை மட்டுமல்ல‌

    பல இடங்களிலும் குற்றம் செய்யப்பட்டதாக அழைத்து வரப்படும் பலரையும், குற்றம் செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முன்பே, கைதியை குற்றவாளியாக ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை ...

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை, தவறு எங்கே என்றும் புரியவில்லை
    பதிலளி
    பதில்கள்
    1. #என்ன சொல்வது என்றே தெரியவில்லை, தவறு எங்கே என்றும் புரியவில்லை#
      நன்றி சகோ. ஜமால்.
  20. அருமையான பதிவு சகோ.

    "ரௌத்திரம் பழகு" என்பதற்கு ஏற்றவாறே உள்ளது உங்களின் தைரியம். அதற்க்கு முதலில் பாராட்டுகள். உங்களை போன்ற சிலரை வைத்துதான் இறைவன் இந்த உலகில் நீதியை இன்னும் வாழ வைத்துகொண்டிருக்கிறான்.

    உங்களை போன்றே.. இன்னொரு உதாரணம்.. திரு. சஞ்சய் பாட், IPS, குஜராத்.

    அந்த சிறுவன் ஒரு முஸ்லிமோ, இந்துவோ, கிருஷ்தரோ அல்லது வேறு எந்த ஒரு மதத்தை சார்திருந்தாலுமே, முதலில் அவன் ஒரு மனிதன்.. தவறு எதுமே செய்யாத ஒருவனை கொடுமை படுத்திய விதமும் அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணமும் மிக மிக கொடுமையானதொன்று.

    அந்த சிறுவனின் அன்பும், அந்த சிறுவன் மீது நீங்கள் காட்டிய பரிவும் மிக உன்னத இடத்தில வைத்து பாராட்டபடவேண்டியது.

    ///காஷ்மீர் என்றாலே தீவிரவாதம்  முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு? //

    மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ. Really Stunning!

    //பொது மக்களுக்கு பாதுகாப்பை மனதில்  உணர வைக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு ஆப்ரேசனின் குறிக்கோளாகும்.அது  நடப்பதில்லை என்பதும் மாறாக பயமும் வெறுப்பும் தோன்றுகிறது என்பது  கசப்பான உண்மை. //

    இது போன்ற காரணங்களால் தான் தீவரவாதம் பெருகுகிறது.. தீவரவாதி உருவாகிறான் என்று மிகசசரியாக உங்கள் நண்பரிடமும் மற்றும் எங்கள் அனைவரிடமும் பகிர்ந்து உள்ளீர்கள்.

    உங்களின் இதுபோன்ற உண்மையை உரக்க கூறும், நியாயத்திற்காக போராடும் பணிகள் மென்மேலும் தொடரவும், வெற்றியடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இறைவன் எல்லா வளமும் வழங்குவானாக.!!!
    பதிலளி
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோ.இணைந்திருப்போம்.
  21. உங்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அது முன்னால் ஒரு அனானி சொன்னது போல இஸ்லாமியர்களால் இந்த இடுகை தவறாக உபயோக படுத்த படுகிறது. தொடர்ந்து பதியுங்கள், உங்கள் வேலைக்கு ஆபத்து வராதபடிக்கு. ஆனால் உங்கள் நோக்கத்தை தவறாக உபயோகப்படுத்துபவர்களை உதாசீனப்படுத்துங்கள்.
    பதிலளி
  22. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~13 மே, 2012 ’அன்று’ முற்பகல் 7:50
    சகோ தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்

    இதுபோன்ற முஸ்லிம்களுக்கு எதிரான சதிகள், அநீதிகள் பற்றி தொடர்ந்து எழுதுங்கள். வேறு வீண்விரயமான பதிவுகளை தவிர்த்து இதுபோன்ற பதிவுகளை எழுதுங்கள்.

    அல்லாஹ் உங்களுக்கு துணைபுரிவார்
    பதிலளி
    பதில்கள்
    1. இது நான் போட்ட பின்னூட்டம் இல்லை..!

      இதுபோல,
      எனது பெயரில் வந்து அனானி பின்னூட்டம் இடுவது, அநாகரிகம்..! இந்த கேவலமான 'நரித்தனத்திற்கு' எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..!
    2. To
      Bro.Sathish Sellathurai,

      A kind information for you and others who know me..!

      The above comment is not mine..!
      I use my profile to post comments..!
      Please, note that... the above comment is not from my profile..!


      Note:-
      My previous reply has been deleted for ever.
      I shall be satisfied if i know the reason.
      Thanks bro.Sathish.
    3. சகோ ஆஷிக் நான் இது வரை எந்த கமெண்ட்களையும் நீக்க வில்லை.உங்கள் பெயரில் யார்?எனக்கு கணினி அறிவு நான் படித்த பத்தாம் வகுப்புக்கு இணையானது மட்டுமே.எநிதம் இழப்பதற்கு ஒன்றுமில்லை.வருகைக்கு நன்றி.இணைந்திருப்போம்.
  23. வணக்கம் சகோதரரே!!

    ஒரு விடயத்தை கவனித்தீர்களா.. தங்கள் பதிவுக்கு இஸ்லாமியர் அல்லாத எத்தனை பேர் கமெண்ட்ஸ் போட்டிருக்கிறார்கள்?

    இந்த பயங்கரவாத கும்பல் உங்கள் நோக்கத்தையே திசை திருப்பிவிடும். நீங்கள் எழுதிய நோக்கம் மனிதாபிமானமாக இருப்பினும் இவர்கள் எல்லோருமாக சேர்ந்து உங்களையும் தங்கள் கூட்டத்துடன் சேர்த்து கேவலமாக்கிவிடுவார்கள்
    பதிலளி
  24. அச்சச்சோ... மதவெறி கூட்டம் இங்கேயும் வந்துட்ட்டா... இனி இந்த ப்ளாக்கும் ஆமை புகுந்த வீடு போலத்தான்
    பதிலளி
  25. ஏன் சகோ செல்லத்துரை!!

    எழுதுவதற்கு எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கும்போது இந்த பயங்கரவாத கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கி உங்கள் பெயரையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்
    பதிலளி
  26. வாழ்த்துக்கள். தவறான காரணத்துக்காக தமிழ்மண மகுடமேறிய நல்ல இடுகை. ஏன் மகுடமேறியது என்பது தெரியும்தானே?

    பதிவுலக அரசியலில் சிக்கிக்கொள்ளாதீர்கள். கூடி கும்மி அடிக்கவும் உங்களை பகடைகாயாக உபயோகப்படுத்திக்கொள்ளவும் இரு பக்கமும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.
    பதிலளி
  27. வேதனை அனுபவிப்பவர்கள் கட்டாயம் இதைதான் செய்வார்கள்.அனைத்தையும் மீறி ஒரு மனிதனாக முஸ்லிம் இல்லாத ஒருவர் வேதனையோடு ஒரு கருத்து எழுதியிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்.தனது சமுதாய பற்றை விட இன்னொரு சமுதாயத்தின் மீதான வெறுப்பு அதிகமாக தெரியும் கருத்துக்கள் கவலையை தருகின்றன.
    பதிலளி
  28. ஸலாம்

    உண்மையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி ...

    உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு ....!!!
    பதிலளி
  29. நண்பரே உங்கள் நோக்கம் உண்மை என்றால் . உங்கள் கருத்துக்கள் உங்களை சந்தேகம் கொள்ள வைக்கிறது ..
    இது ராணுவத்தின் அத்து மீறிய செயல் தான் . இது இந்தியா ராணுவம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நடப்பது தான் .. உ. பி ..ஜார்க்கன்ட் , ஓடிஸா ,,, இங்கெல்லாம் பழங்குடியின மக்களை மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் சித்திரவதை செய்கிறார்கள் .. இதில் முஸ்லீம் பிரெச்சனை எங்கிருந்து வந்தது ?
    மனித உரிமை பிரெச்சனை தான் இது ஆனால் வசதியாக முஸ்லீம் இந்த நாட்டில் கொடுமை படுத்தபடுகிறார்கள் என்கிற திசையில் இருக்கிறது உங்கள் பதிவு . நான் ஒன்று கேட்கிறேன் பாக்கிஸ்தானில் ஒரு கிருஸ்தவ சிறுமி நபியை இறைத்தூதர் என்று ஒத்துகொள்ள மறுத்ததால் போலிஸ் நிலையத்தில் வைத்து தாக்க பட்டால் (காரணத்தை கவனிக்கவும் ) இதை தவறு என்று கண்டித்த கவர்னர் பத்வா போட்டு கொல்லபட்டார் .கொன்றவனின் தூக்கை பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது . இஸ்லாமிய நாடுகளில் மனித உரிமை அதிகமாக உள்ள ஒரு நாட்டை நீங்கள் காட்ட முடியுமா? மனித உரிமைக்கு இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ..
    மதவாதிகள் வலையில் விழவேண்டாம் என்று இங்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு உங்கள் பதிலையும் ...
    மதவாதிகள் என்று கருத படுபவர்களுக்கு நீங்கள் அளித்த பதிலையும் பார்த்தேன் .............
    சாரி பாஸ் ரௌத்திரம் தவறாக பழகிகொண்டிருக்கிரீர்கள்...............
    பதிலளி
    பதில்கள்
    1. நண்பரே,நான் நமது சமுதாயத்தில் இஸ்லாமியர்களை கவனிக்கும் கண்ணோட்டம் உண்மையா?இல்லையா? வட இந்தியாவில் இது இன்னும் அதிகம்.பழங்குடியின மக்களை பார்க்கும் கண்ணோட்டமும் இஸ்லாமியர்களை பார்க்கும் கண்ணோட்டமும் வேறு நண்பரே.பாகிஸ்தானில் நடந்த சம்பவம் மட்டுமில்லை. இது போல உள்ள சம்பவங்கள் அனைத்தும் கண்டிக்கத்தக்கதே.மற்ற நாடுகளை விட நாம்தான் ஜனநாயகம்,மத சார்பற்ற நாடு என்கிறோம்.தங்கள் வருகைக்கு நன்றி.இணைந்திருப்போம்.
    2. உண்மையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு
  30. தன் வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுக்க சொன்னால் அவன் வீட்டில் பார் அதிகம் குப்பை அதனால் இந்த குப்பையாய் எடுக்க மாடேன் என்று கூறுவது போல் உள்ளது சில மனிதாபிமானம் இல்ல சிலரின் கருத்துக்கள் ....
    காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தெரியும் ....
    பதிலளி
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரரே,அதிலும் என் வீடு அப்படி இப்படி என்று பெருமை வேறு .....வருகைக்கு நன்றி சகோதரா...
  31. அருமையான ஆக்கம்! வாழ்த்துக்கள்
    BEST WISHES FROM
    HAMEED
    PONDICHERRY
    பதிலளி
  32. ALLAH UNGALAI NERVAZHI PADUTHI,UNGAL ELLA KARIYANGALAIYUM SEERPADUTHUVAANAGA....
    பதிலளி
    பதில்கள்
    1. வருகைக்கும் நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ..
  33. JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
    "Allah will reward you [with] goodness."
    பதிலளி
  34. தங்களை போன்ற நல்லோர் மிகுதியாகவும்,
    தங்களின் பணிக்கும் உடமைக்கும் உயிருக்கும் யாராலும் எவ்வித ஆபத்தும் வராமல் இருக்கவும்,
    தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவும்,
    வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் "
    பதிலளி
    பதில்கள்
    1. ஆமாம் அப்பதான் நாங்க ஈசியா இந்தியாவை இசுலாமிய நாடா மாத்த முடியும்.
      அல்லாஹூ அக்பர்
    2. ஹா ஹா ஹா இது பேக் ஐடின்னு பட்டவர்த்தனமா தெரியுது..
  35. உங்கள் கறுத்துடன் ஒத்து போகிறேன் நானும் இராண்டு வருடம் அங்கு இருந்தேன்.
    பதிலளிநீக்கு